தைபே, டிசம்பர் 15 – தைவானில், வெற்று நீரை காட்டிலும் “பபிள் டீயை” அதிகம் விரும்பி குடித்து வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரின் உடலில் இருந்து, முன்னூறுக்கும் அதிகமான பித்தப்பை கற்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வயது “Xiao Yu” எனும் அப்பெண், காய்ச்சல், முதுகு வலி காரணமாக, கடந்த வாரம் தைனான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வாயிலாக, அப்பெண்ணின் வலது சிறுநீரகம் வீங்கி இருப்பதையும், அதிலிருந்து திரவம் வடிவதோடு, பித்தப்பை கற்கள் இருப்பதையும் கண்டு பிடித்தனர்.
அந்த கற்கள் ஒவ்வொன்றும், ஐந்து மில்லிமீட்டர் முதல் இரண்டு செண்டிமீட்டர் வரை பெரியதாக இருந்ததும் தெரிய வந்தது.
அதனால், அவரது உடலில் வெள்ளை இரத்த அணுக்களும் அதிகரித்து காணப்பட்டது.
அதனால், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், ஒரு பெரிய ரொட்டி அளவில் பித்தப் பை கற்களை அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அப்பெண்ணின் உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.