கோலாலம்பூர், நவ 29 – நன்கொடைகளை எங்கள் மூலமாக அனுப்பிவைக்கும்படி அரசு சார்ப்பற்ற இயக்கங்களிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லையென கோலாலம்பூரிலுள்ள பாலஸ்தீன தூதரகம் தெரிவித்திருக்கிறது. உண்மையில் பாலஸ்தீனர்களுக்கான எந்தவொரு நிதி திரட்டும் நடவடிக்கையும் மலேசிய அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என பாலஸ்தீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மலேசியாவிலுள்ள அரசு சார்பற்ற இயக்கங்கள் தங்களது நன்கொடையை தூதரகம் மற்றும் தூதர் மூலமாக அனுப்பும்படி கேட்டுக்கொண்டதாக சில தரப்பினர் கூறி வருகின்றனர். இது உண்மையல்ல. இப்படியொரு தகவல் வெளியாகியிருந்தால் அது முழுக்க முழுக்க பொய்யாகும் என பாலஸ்தீன தூதரகம் கூறியது.