கோலாலம்பூர், பிப்ரவரி 9 – பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கும் இடையூறை ஏற்படுத்தாத வகையிலும், மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாத வகையிலும், பொது திறந்த வெளிகளில் பட்டாசுகளை வெடிக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, நள்ளிரவு மணி 12-க்கு மேல், பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என, அரச மலேசிய போலீஸ் படையின் துணை ஆணையர் அல்சாப்னி அஹ்மாட் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீறினால், சிறு குற்றச்செயல்கள் சட்டம் அல்லது வெடிமருந்துகள் சட்டத்தின் கீழ், ஏழாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படாலாம் என அல்சாப்னி எச்சரித்தார்.
அதே சமயம், இணையம் வாயிலாக பட்டாசுகளை விற்பதும் குற்றமாகும் என்றாரவர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், வெடிமருந்துகள் சட்டத்தின் கீழ், ஏழாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது பத்தாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படாலாம்.