கோலாலம்பூர், பிப்ரவரி 2 – நாட்டின் 17-வது மாமன்னராக அரியணை அமர்ந்திருக்கும், பேரரசர் சுல்தான் இப்ராஹிமிற்கு, பிரிட்டன் அரச தம்பதியான மூன்றாவது சார்லஸ் மன்னரும், கமிலா அரசியாரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையம் அனுப்பியுள்ள அறிக்கையில் அந்த வாழ்த்துச் செய்தி இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நாட்டின் 17-வது பேரரசராக, சுல்தான் இப்ராஜிம் அரியணை அமர்ந்தார்.
இப்ராஹிம் ஆட்சியின் கீழ், பிரிட்டனுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான இருவழி உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியுமென சார்லஸ் மன்னர் அந்த வாழ்த்துச் செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2017-ஆம் ஆண்டு, மலேசியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான 60 ஆண்டு அரச தந்திர உறவை முன்னிட்டு, அப்பொழுது பிரிட்டன் பட்டத்து இளவரசராக இருந்த மன்னர் சார்லஸ் தம்பதி மலேசியாவுக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.