ஜோர்ஜ் டவுன், டிசம்பர் 15 – நிராகரிக்கப்பட்ட இ-மடானி விண்ணப்பங்களை உட்படுத்திய பிரச்சனைக்கு நிதி அமைச்சு தீர்வுக் காணுமென, அதன் துணையமைச்சர் லிம் ஹுய் யிங் கூறியுள்ளார்.
அவ்விவகாரம் தொடர்பில், கூடுதல் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்த லிம், கூடிய விரைவில் அவ்விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து நிதி அமைச்சு தீர்வுக் காணும் என்றார்.
கடந்த வாரம் அறிமுகம் கண்டதில் இருந்து இதுவரை பலர் அந்த நூறு ரிங்கிட் இ-மடானி தொகையை பெற்றிருந்தாலும், தகுதியான பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.