Latestமலேசியா

நெடுஞ்சாலையில் பாம்பை மோதியபின் கார் விலகி சென்றதில் ஓட்டுனர் இறந்தார்

தாப்பா, பிப் 12 – தாப்பாவில் வடக்கு நோக்கிச் செல்லும் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 311.5 ஆவது கிலோமீட்டரில் நேற்று அதிகாலையில் ஹோண்டா சிவிக் கார் ஒன்று சாலையை விட்டு விலகிச் செல்லும் முன், அந்த கார் பாம்பு மீது மோதியதால் அதன் ஓட்டுனர் கொல்லப்பட்டார். நேற்று விடியற்காலை 5.38 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், கோலாலம்பூரில் இருந்து பேராக்கின் தைப்பிங்கிற்குப் பயணித்த 36 வயதுடைய ஆடவர் கடுமையாக காயம் அடைந்ததால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார் என தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் முகமட் நைம் அஸ்னாவி தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மேலும் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் முன் வந்து தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். இந்த விவகாரம் 1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் 41 ஆவது உட்பிரிவு (1)ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!