![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-21-Mar-2024-01-50-PM-6134.jpg)
கோலாலம்பூர், மார்ச் 21 – நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிவரை 22 ஆவது OPS Selamat சாலை பாதுகாப்பு நடவடிக்கையை போலீஸ் அதிகாரிகள் அமல்படுத்தவிருக்கின்றனர். தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் மக்களுக்கு சுமுகமான போக்குவரத்து இருப்பதை உறுதிப்படுத்த இந்த சாலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்தோ Mohd Azman Ahmad Sapri தெரிவித்தார். மேலும் பெருநாள் காலத்தில் வீடமைப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் ஆள் நடமாட்டமின்றி இருப்பதால் அவ்வீடுகளின் பாதுகப்பை உறுதிப்படுத்துவதற்கு குற்றத்தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் கூறினார். Jalan Tuanku Abdul Rahman னில் நேற்று கோலாலம்பூர் போலீஸ் படை ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோது Mohd Azman தெரிவித்தார்.