கோலாலம்பூர், மார்ச் 14 – இஸ்லாமியர் அல்லாத பள்ளிப் பிள்ளைகளுக்காக நோன்பு மாதம் முழுவதிலும் பள்ளி சிற்றுண்டி நிலையங்கள் திறக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் வசதியோடு உணவுகளை உட்கொள்ளலாம் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து பள்ளிகளிலும் சிற்றுண்டி நிலையங்கள் இருப்பதால் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிள்ளைகள் பள்ளி கிடங்கு மற்றும் பொருத்தமற்ற இடங்களில் உணவு உட்கொள்வதை தாம் விரும்பவில்லை என அவர் கூறினார்.
எனவே இஸ்லாமியர் அல்லாத பிள்ளைகளைக் கொண்ட பள்ளிகள் அவற்றின் சிற்றுண்டி நிலையங்களை ரமலான் மாதம் முழுவதிலும் திறந்திருக்கும்படி கல்வி அமைச்சு வலியுறுத்துவதாக ஃபட்லினா சிடேக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.