Latestமலேசியா

பங்கோரில், தொலைபேசி மோசடி கும்பலைச் சேர்ந்த 97 பேர் கைது

ஈப்போ, நவம்பர் 3 – பேராக் பங்கோரில், போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், தொலைப்பேசி அழைப்பு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 97 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர், அந்நிய நாட்டவர்கள் ஆவர்.

கடந்த செவ்வாய்கிழமை, அக்டோபர் 31-ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைதுச் செய்யப்பட்டதை, பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி உறுதிப்படுத்தினார்.

மலேசியர் ஒருவரும், இரு சீன நாட்டவர்களும் அதில் அடங்குவார்கள். எஞ்சியவர்கள் அனைவரும் வியட்நாமியர்கள்.

கைதானவர்களில் 30 பெண்களும் அடங்குவர்.

அனைவரும் அனைவரும், தொலைப்பேசி வாயிலாக, முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களிடமிருந்து மடிக் கணினிகள், 120 கைப்பேசிகள், இரு “மாடம்கள்’, இரு கையடக்க கணினிகள் உட்பட 51 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!