யுனிடென் (UNITEN) பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன், பங்சார் TNB தலைமை அலுவலக இந்திய ஊழியர்களும் யுனிடென் ஆய்வகமும் (UNITEN RESEARCH) இணைந்து இரண்டாவது முறையாக இலவசமாக எஸ்.பி.எம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தனர். மலாய் மொழி , ஆங்கில மொழி, வரலாறு மற்றும் கணித பாடங்களின் இறுதி கட்ட தேர்வுக்கான ஆயத்த நடவடிக்கை தொடர்பாக அனுபவமிக்க ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். B பிரிவைச் சேர்ந்த சுமார் 130 மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்வுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் ஏற்பாட்டு குழுவினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
Related Articles
இணையம் வாயிலான கார் விற்பனை மோசடியில் 41 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது போக, கொலை மிரட்டலுக்கும் ஆளான பஹாவ் ஆடவர்
17 hours ago
நாய் கடித்த ஆடவருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்? சுல்தானா அமீனா மருத்துவமனை தன்னிலை விளக்கம்
17 hours ago