பத்து பஹாட், மார்ச் 16 – தஞ்சங் லாபுவுக்கு அருகே ஜலான் பஹாரு – மலாக்கா சாலையின் 103 ஆவது கிலோமீட்டரில் இரு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் அக்கார்களின் இரு ஓட்டுனர்கள் மரணம் அடைந்தனர்.
நேற்றிரவு மணி 11.40 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் இரண்டு பெரோடுவா மைவி கார்கள் சம்பந்தப்பட்டதாக பத்து பாஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
43 வயதுடைய பெண்மனி ரிங்கிட்டிலிருந்து பத்து பாஹாட்டை நோக்கி ஓட்டி வந்த கார், 22 வயதுடை இளைஞர் ஓட்டிவந்த காருடன் எதிரே மோதியதில் அந்த இருவரும் கடுமையாக காயம் அடைந்ததோடு விபத்து நிகழ்ந்த இடத்தியேயே உயிர் இழந்ததனர்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 8 பேர் அந்த இரு கார்களிலும் அதன் இருக்கைகளில் சிக்கிக் கொண்ட ஓட்டுனர்களை வெளியே கொண்டுவந்தனர்.