Latestமலேசியா

பராமரிப்பாளர் இல்லத்தில் 3 மாத குழந்தை மரணம்

கோலாலம்பூர், மார்ச் 20 – புத்ரா ஜெயா, Presint 15 இல் குழந்தை பராமரிப்பு இல்லத்தில் விடப்பட்ட மூன்று மாதம் ஆறு நாளான பெண் குழந்தை ஒன்று நேற்று இறந்தது. அந்த குழந்தை பாமரிப்பாளரிடம் விடப்பட்டு இரண்டு நாள் தான் ஆனதாக புத்ரா ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர்
A.Asmadi Abdul Aziz தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் மணி 1.04 அளவில் அக்குழந்தை இறந்ததாக புத்ரா ஜெயா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து தகவலை பெற்றதாக அவர் கூறினார்.

அன்றைய தினம் காலை மணி 11.45 அளவில் அக்குழந்தை பராமரிப்பிற்காக தம்மிடம் விடப்பட்டதாகவும் மருத்துவமனையின் அவசர சிகிக்சை பிரிவுக்கு கொண்டுவரப்பட்டபோது அக்குழந்தை சுயநினைவின்றி இருந்ததாக அந்த குழந்தை பராமரிப்பாளர் கூறியிருக்கிறார். தமது வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரும்வரை சுமார் 30 நிமிடம் வரை சுவாச உதவியை வழங்கியபோதிலும் அது நினைவு திரும்பாமலேயே மதியம் மணி 12.16அளவில் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக Samadi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!