Latestசிங்கப்பூர்

பலரிடம் 880,000 டாலர் மோசடி செய்த சிங்கப்பூர் பெண்ணுக்கு 85 மாதம் சிறை

சிங்கப்பூர், நவ 1 – சிங்கப்பூரில் மோசடி பெண்மணி ஒருவர் 10க்கும் மேற்பட்டோரை 880,000 டாலர் ஏமாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு 85 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பியானோ ஆசிரியை என்றும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றும் வழக்கறிஞர் என்றும் அந்த பெண் கூறி பலரை ஏமாற்றியுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டு காலத்தில் 10 க்கும் மேற்பட்டோரை 880,000 சிங்கப்பூர் டாலருக்கும் மேலாக ஏமாற்றியிருப்பதாக 49 வயதுடைய ஜோஸ்லின் க்வெக் சோக் கூன் என்ற அந்த பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. காதல் மோசடி, முதலீடு திட்டங்களிலும் அவர் சம்பந்தப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஜோஸ்லினின் மோசடியினால் அவரது காதலரின் பெற்றோர்கள், சகோதரி, அவரது சொந்த பாட்டி, மற்றும் அவரது கணவரின் முன்னாள் நண்பர் ஆகியோரும்கூட பணம் இழந்ததாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் ஃபிபி தான்  (Phobe Tan) நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 85 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!