![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/60907845-f131-48c1-a044-82da17cee180.jpeg)
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-9 – காரோட்டி hand break-கை இழுக்கத் தவறியதால் கார் பின்னால் சென்றதில், இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் சிக்கின.
Facebook-கில் வைரலாகியுள்ள அச்சம்பவம் சிலாங்கூர், பாலாகோங்கில் கார் சர்வீஸ் மையமொன்றின் முன்புறம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அம்மையத்திற்குள் நுழைந்த வெள்ளை நிறக் கார், ஓட்டுநர் கதவு திறந்த வாக்கில் கார் நிறுத்துமிடத்தில் இருந்து ரிவர்ஸ் ஆகி சாலையின் நடுவே போய் விட்டது 51 வினாடி காணொலியில் தெரிகிறது.
அப்போது அவ்வழியே வந்த 2 மோட்டார் சைக்கிளோட்டிகள் அக்காரை மோதி கீழே விழுந்தனர்.
அதில் அவர்களுக்கு ஏற்பட்ட காயம் குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.
வைரலான வீடியோ பதிவின் கீழ் நெட்டிசன்கள் காரோட்டியின் அலட்சியத்தை விளாசி வருகின்றனர்.
Hand break-கை இழுக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன அவசரம்? தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள்களுக்குத் தான் பாதிப்பு என அக்காரோட்டியைக் கடிந்துக் கொண்டனர்.
காரை நிறுத்தும் போது Hand break-கை இழுக்க வேண்டும் என்பது கூடவா தெரியாது? இது வாங்கிய லைசென்ஸா என ஒருவர் கேள்வி எழுப்பினார்.