கோலாலம்பூர், டிசம்பர் 21: இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை பல்வேறு குற்றங்களுக்காக கோலாலம்பூர் காவல் படையின் அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 காவல்துறையினர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 41ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 31ஆக குறைந்துள்ளது என்று கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.
அரசு மலேசிய காவல்துறையின் அடையாளத்தை தாங்கி நிற்கும், காவல் துறையினரும் உறுப்பினர்களும் தமது கடமைகளை நேர்மையுடன், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு ஏதுவாக கடமைகளை செய்ய வேண்டும் என அல்லாவுடின் தெரிவித்தார்.
இதனிடையே 93 காவல்துறையினர் கோப்ரல் பதவியிலிருந்து சார்ஜென்டாகவும், 34 பேர் சார்ஜென்ட் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றதாகவும் அவர் கூறினார்.