தெஹ்ரான் , ஏப் 19 – ஈரானில் உள்ள ஒரு தளத்தில் இஸ்ரேல் ஏவுகனைகள் தாக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி ABC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இஸ்ரேல் மீது பதிலடி கொடுப்பதற்காக ஆளில்லா விமானத் தாக்குதலைத் ஈரான் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டின் முக்கிய நகர மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லையென Reuters நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் மத்திய நகரமான Isfahan னில் உள்ள விமான நிலையத்தில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், ஆனால் அதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் ஈரானின் Fars செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Isfahan , Shiraz மற்றும் Tehran ஆகிய நகர்களுக்கான விமானங்களை ஈரான் நிறுத்தியிருப்பதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப் பகுதியான Natanz உட்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் Isfahan மாநிலத்தில் அமைந்துள்ளன. இன்று அதிகாலை ஈரான் மீது பறந்து கொண்டிருந்த சில Emirates மற்றும் Flydubai விமானங்கள் வான்வெளியில் இருந்து திடீரென திருப்பங்களைச் செய்ததாக கண்காணிப்பு இணையதளமான Flightradar 24 இல் காட்டப்பட்டுள்ள விமானப் பாதைகள் தெரிவிக்கின்றன. Tehraனின் Imam Khomeini அனைத்துலக விமான நிலையம் அனைத்து விமானங்களுக்கும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.