Latestமலேசியா

பழைய சாண்ட்விச்சை உண்டதாக மாது பலி?

கோலாலம்பூர், டிச 23 – திராங்கானுவில் உள்ள நெடுஞ்சாலை ஓய்வுப் பகுதியில் வாங்கப்பட்ட சாண்ட்விச் ரொட்டியைச் சாப்பிட்ட பெண் ஒருவர் இறந்ததாகச் சமூக ஊடகங்களில் வைராலகி வருகிறது.

பழைய சாண்ட்விச் உணவினால் ஏற்பட்ட நச்சு தன்மையால் தனது தாயின் சகோதரியை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது என்று சஹாரா நபிலா என்பவர் அவரின் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில் அந்த மாது உயிரிழந்ததோடு, அவரின் மகனின் உடல் நலம் இன்னும் சீராகமால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகத்திற்கு தொடர்பு கொண்டும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. மருத்துவமனையிலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் வழங்கியுள்ளதாக அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.

தனது பிள்ளையை பல்கலைக்கழகத்திற்கு பதிவு செய்ய அழைத்து சென்ற தாயின் சகோதரிக்கு நேர்ந்த இச்சம்பவம் பலரின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளது என கருத்துகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து போலிசாரின் அறிக்கைக்காக காத்திருக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!