
கோலா திரங்கானு, மே 22 – கோலா திரங்கானு வகாஃப் தெங்காவில் (Wakaf Tengah) , போலி ‘ஹரும் மானிஸ்’ மாம்பழ முதலீட்டில் ஏமாந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், தனது மொத்த ஓய்வூதிய சேமிப்பு தொகையான, 67,573.63 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
61 வயது மதிக்கத்தக்க அந்த ஆசிரியர், முதலில் முகநூலில் ‘ஹரும் மானிஸ்’ விற்பனை விளமபரத்தைப் பார்த்ததாகவும் பின்னர் சந்தேக நபரைத் தொடர்புக் கொண்டு அதன் முதலீட்டு விவரங்களைப் பெற்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் வழங்கிய முதலீட்டு குறியீட்டைப் பெற்ற அடுத்த நாள், தனது வங்கி சேமிப்பு அனைத்தும் மறைந்துவிட்டதை கண்டறிந்த ஆசிரியர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கோலா திரங்கானு காவல்துறைத் தலைவர் அஸ்லி முகமது நூர் (Azli Mohd Noor) தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு மேற்கட்ட விசாரணையில் இருப்பதாகவும், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டுமெனவும் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.