Latestமலேசியா

பாகான் செராயில் அருகே கார் மோட்டார் சைக்கிளை மோதியது; 5 வயது சிறுமி மரணம் மேலும் மூவர் காயம்

ஈப்போ, ஜன 31- பாகான் செராயில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் அந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 5 வயது சிறுமி உயிரிழந்த வேளையில் 32 வயது பெண், 14 வயது மற்றும் ஏழு வயது சிறுவர்கள் காயம் அடைந்தனர். பாரிட் புந்தார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளையில் அந்த சிறுமி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. நேற்றிரவு மணி 9.41 அளவில் ஜாலான் அலோர் பாங்சு – கம்போங் மாதாங் ஜெலுதோங்கில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் அதிகாரி
ஃபைசருதீன் முகமட் யூசோப் கூறினார்.

ஆடவரால் ஓட்டிச்சென்ற கார் ஒரு பெண் தமது மூன்று பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதியது. அந்த விபத்தைத் தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் சாலையின் அருகேயுள்ள கால்வாயில் விழுந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!