பினாங்கு, பிப் 17 – பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட “The Legend Hariharan” இசை நிகழ்ச்சி நாளை பிப்ரவரி 17 ஆம் திகதி பினாங்கில், ஸ்பைஸ் அரெனா எனும் அரங்கில் இடம்பெறவுள்ளது.
ஹலோ கிரியேட்டிவ் ஏற்பாட்டில் முதல் முறையாக நடைபெறவுள்ள பாடகர் ஹரிஹரன் இசைநிகழ்ச்சி, நாளை மாலை 7 மணியளவில் தொடங்கவுள்ளது.
இந்த பாடல் நிகழ்ச்சியில் உள்ளூர் பாடகர்களான திலிப் வர்மன் மற்றும் முகேன் ராவ் உட்பட 10க்கும் மேற்பட்ட பிரபல பாடகர்கள் பங்குபெற்று பாடல்களை பாடி ரசிகர்களை அசத்த போகின்றனர்.
இதனிடையே, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில், மலேசிய கலைஞர் ஒருவருக்கு சிறப்பு செய்யும் அங்கமும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.