கங்கார், ஜன 16 – பாடாங் பெசாரில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 19 மில்லியன் மதிப்புடைய 528 கிலோ மெத்தம்பேட்டமைன் (methamphetamine) போதைப் பொளை பறிமுதல் செய்த போலீசார் போதைப் பொருள் கும்பலையும் முறியடித்தனர். உள்நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய ஆடவன் ஒருவனையும் கைது செய்ததாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் கமாருடின் முகமட் டின் தெரிவித்தார்.
அந்த போதைப் பொருள் இரும்பு தள்ளு வண்டியில் வைக்கப்பட்டிருந்த சாக்குப் பையில் வைக்கப்பட்டிருந்தது. கிளைகள் மற்றும் இலைகளுக்கு மத்தியில் அந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பெர்லீஸ் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முகமட் கமாருடின் கூறினார். இதன் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்ட தகவலையும் அவர் வெளியிட்டார்.