பாப்பார், ஏப் 25 – Jalan Pan Borneo , 20ஆவது கிலோமீட்டரில் சாலை ஓரத்திலுள்ள குடில் ஒன்றில் மழைக்காக ஒதுங்கியிருந்த ஆடவர் ஒருவர் Toyota Harrier வாகனம் மோதியதால் மரணம் அடைந்தார். 48 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் அந்த குடிலில் ஒதுங்கியிருந்தபோது, Harrier வாகனத்தை ஓட்டிய அதன் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து; அந்த வாகனம் கவிழ்ந்து சாலை தடுப்பில் மோதியபின் மளிகைக் கடைக்கு முன்புறம் உள்ள குடிலில் நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதியது. இதனால் கடுமையாக காயம் அடைந்த மோட்டார் சைக்கிளோட்டி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக Papar மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Kamaruddin Ambo Sakka தெரிவித்தார்.
Related Articles
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கண்காணிக்க சிறப்பு செயற்குழுவா? அவசியமில்லை ! – டத்தோ ரமணன்
19 hours ago
பவள விழாவைக் கொண்டாடும் Bank Rakyat வீரியம் குறையாமல் சேவையைத் தொடர வேண்டும் – டத்தோ ரமணன் வலியுறுத்து
19 hours ago