பாரிஸ், டிச 11 – பாரிஸ்லுள்ள “Paris luxury Ritz” தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது மலேசியப் பெண்மணி ஒருவருக்குச் சொந்தமான 37 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய வைர மோதிரம் காணாமல் போனதைத் தொடர்ந்து போலிஸ் புகார் செய்யப்பட்ட நிலையில், அது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று, தங்கும் விடுதி அறையில் மோதிரத்தை வைத்துவிட்டு, வெளியே பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் திரும்பியபோது, மோதிரத்தை காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார் அப்பெண்.
இதனிடையே தீவிர தேடலுக்குப் பின், அம்மோதிரம் தரையை சுத்தம் செய்யும் ‘வேக்கியும் கிளினர்’ இயந்திரத்தின் தூசி சேறும் பையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் மோதிர உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பெண் லண்டனுக்குச் சென்றுள்ளதால் அம்மோதிரம் அவரிடம் இன்னமும் ஒப்படைக்கவில்லை.