ஜெம்போல், ஜன 13 – நெகிரி செம்பிலானில் பாஹாவ் போலீஸ் நிலையத்திற்கு பின்னால் புலி ஒன்று கடித்துக் குதறியதால் ஆடவரின் வலது கை துண்டிக்கப்பட்டதாக தகவலுடன் சமூக வலைத்தலளத்தில் வெளியான காணொளியை போலீசார் மறுத்தனர். ஜெம்போல் மற்றும் பாஹாவ் வட்டாரத்தில் புலியினால் ஆடவர் தாக்கப்பட்டதாக இதுவரை எந்தவொரு புகாரையும் பெறவில்லையென ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் ஹூ சாங் ஹூக் கூறினார். அதோடு ஒருவரின் கை துண்டிக்கப்படும் வகையில் புதிதாக குற்றச் செயல் எதுவும் நடந்ததாகவும் போலீசிற்கு தகவல் கிடைக்கவில்லையென அவர் தெரிவித்தார்.
அந்த காணொளியில் காணப்படும் ஆடவர் இந்தோனேசியாவில் முதலை தாக்கப்பட்டதால் கை துண்டிப்புக்கு உள்ளானவர் என ஹூ சாங் ஹூக் தெரிவித்தார். எனவே மக்களை அச்சுறுத்தக்கூடிய உண்மைக்கு புறம்பான அந்த காணொளியை எவருக்கும் பகிர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.