Latestமலேசியா

பினாங்கில், குடிநுழைவுத் துறை அதிகாரிக்கு RM16,000 கையூட்டு வழங்கி தப்ப முயன்ற வெளிநாட்டு பெண்கள் கைது

ஜோர்ஜ் டவுன், ஜூலை 25 – பினாங்கில், ஜோர்ஜ் டவுனிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும், வெளிநாட்டு பெண்கள் மூவர் கைதுச் செய்யப்பட்டனர்.

குடிநுழைவுத் துறை அதிகாரிகளை கண்டதும் அழுது புலம்புவதை போல பாசாங்கி செய்து பயனில்லை என்பதை உணர்ந்ததும், 16 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு வழங்க முயன்றதாக கூறப்படுகிறது.

நேற்றிரவு மணி ஒன்பது வாக்கில், விபச்சார நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில், தங்கும் விடுதி ஒன்றில், அம்மூன்று பெண்களும் கைதுச் செய்யப்பட்டதை, பினாங்கு குடிநுழைவுத் துறை இயக்குனர் நூர் சுல்பா இப்ராஹிம் (Nur Zulfa Ibrahim) உறுதிப்படுத்தினார்.

25 முதல் 29 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவரும், தாய்லாந்து, லாவுஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களில் சிலர் அடிக்கடி நாட்டிற்கு வந்து போனதும் தெரிய வந்துள்ளது.

ஒரு மணி நேரம், 240 கட்டணத்தில் VIP சேவைகளை அவர்கள் வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகவர்களின் கண்காணிப்பில் அவர்கள் செயல்பட்டிருக்கலாம் எனும் சாத்தியத்தை நூர் சுல்பா மறுக்கவில்லை.

மேல் விசாரணைக்காக அவர்கள் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!