ஜோர்ஜ் டவுன், டிச 4 – பினாங்கு பாயான் பாருவுக்கு அருகே நேற்று மாலை மணி 5.55 அளவில் குயின்ஸ்பே கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் அங்கு கரையோரத்தில் புதிதாக பிறந்த பெண் சிசுவின் சடலம் மிதந்துகொண்டிருப்பதைக் கொண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகினர். முழு வளர்ச்சியைக் கொண்ட அந்த குழந்தை உடை எதுவும் அணியப்படாத நிலையில் அங்கு காணப்பட்டதை கண்டு பொதுமக்கள் தகவல் கொடுத்ததாக பாராட் டாயா போலீஸ் நிலையத்தின் தலைவர் கமாருல் ரிசால் ஜெனால் தெரிவித்தார்.
அலையினால் அடித்துவரப்பட்ட அந்த குழந்தையின் உடல் கரையோரம் ஒதுங்கியிருக்கக்கூடும் என விசாரணை மூலம் தெரியவந்ததாக அவர் கூறினார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு அக்குழந்தையின் உடல் சவப் பரிசோதனைக்காக பினாங்கு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கமாருல் ரிசால் தெரிவித்தார்.