ஜார்ஜ்டவுன், டிசம்பர் 18 – சைக்கிளோட்டப் போட்டியை முன்னிட்டு பினாங்கின் இரண்டாவது பாலமான சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்சாம் ஷா பாலம் எதிர்வரும் டிசம்பர் 22, வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி தொடங்கி டிசம்பர் 23, மாலை 3:00 மூடப்படும்.
நடைப்பெறவுள்ள 54km தூர சைக்கிள் போட்டியின் ஒரு பகுதியாக
போட்டியாளர்கள் அந்தப் பாலத்தைப் பயன்படுத்துவர் என ஜம்பாதான் கெடுவா சென்ட் பெர்ஹாட் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
போட்டி முடிந்ததும் அதே நாளில் பாலம் மீண்டும் திறக்கப்பட்டு, வழக்க நிலைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலையைப் பயன்படுத்தும் பயனர்கள் வேறு வழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.