பட்டர்வொர்த், டிசம்பர் 29 – பினாங்கில், தனது 14 வயது மகளை கற்பழித்ததாக நம்பப்படும் லோரி ஓட்டுனர் ஒருவருக்கு எதிராக பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், அந்த 39 வயது ஆடவன், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியுள்ளான்.
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, பின்னிரவு மணி 2.30 வாக்கில், செபெராங் பெராய் செலாதான், சிம்பாங் அம்பாட்டிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பத்தாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் அவ்வாடவனை விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
அதே சமயம், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மகளை அணுக அவனுக்கு தடை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை ஜனவரி 30-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.