Latestமலேசியா

பினாங்கில் தொழிற்சாலையில் குழாய் அடைப்பை சரி செய்யும் போது பலியான துப்புரவுப் பணியாளர்

நிபோங் தெபால், ஜூன்-12, பினாங்கு நிபோங் தெபாலில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் அடைத்துக் கொண்ட குழாயைக் கழுவ குளத்தில் இறங்கிய ஆடவர் மரணமடைந்தார்.

41 வயது அந்த துப்புரவுப் பணியாளர் தனி ஆளாக குளத்தில் இறங்கி குழாயைச் சுத்தம் செய்ய போன போது அச்சம்பவம் நிகழ்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொழிற்சாலையில்
அவரைக் காணவில்லை என அறிந்து, CCTV கேமரா பதிவுகளைப் பார்த்த போது அவர் குளத்தினுள் இறங்குவதைக் கண்டு சகத் தொழிலாளிகள் சென்று அவரை சடலமாக மீட்டனர்.

இதையடுத்து விசாரணை முடியும் வரை சம்பவ இடத்தில் வேலைகளை நிறுத்தி வைக்குமாறு பினாங்கு வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை JKKP உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய உட்கட்ட விசாரணை நடத்துமாறு அத்தொழிற்சாலையின் உரிமையாளரும் பணிக்கப்பட்டுள்ளார்.

வேலையிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பும் சுகாதார பராமரிப்பும் முக்கியம் என்பதை அனைத்து முதலாளிகளும் நன்கறிவர்.

எந்நேரமும் அது கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் பினாங்கு JKKP நினைவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!