புத்ரா ஜெயா, நவ 27 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கொலை செய்வதற்கு 5 மில்லியன் ரிங்கிட் வழங்க முன்வருவதாக டிக் டொக் காணொளி மூலம் அறிக்கை வெளியிட்ட நபருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. புத்ரா ஜெயாவில் பிரேசின்ட் 7 போலீஸ் நிலையத்தில் முகமட் ஷாஸ்ரின் எசாம் முகமட் சைடி என்பவர் இந்த புகாரை செய்துள்ளார். டிக் டொக்கில் வெளியான கேள்விக்குரிய அந்த காணொளி அகற்றப்பட்டுள்ளது. புத்ரா ஜெயாவிலுள்ள பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் உறுப்பினர்களில் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் போலீசில் புகார் செய்துள்ளதாக நிதியமைச்சரின் அரசியல் செயலாளர் கமில் முனிம் தெரிவித்தார்.
நேற்று விடியற்காலையில் அந்த காணொளியை தாங்கள் கண்டறிந்ததாக அவர் கூறினார். வெறுப்புணர்வை ஏற்படுத்தும் இத்தகைய காணொளிகள் நாட்டிற்கு பாதகத்தை கொண்டுவரும் என அவர் கூறினார். இந்த காணொளி தொடர்பாக போலீசார் விரைந்து விசாரண மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமுகமட் ஷாஸ்ரின் எசாம் முகமட் சைடி தெரிவித்தார்.