ஈப்போ, ஜனவரி 30 – பிரிட்டிஷ் சுற்றுப் பயணிகளிடம், நூறு ரிங்கிட்டை கையூட்டாக வாங்கிய போக்குவரத்து போலீஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதே சமயம், சமூக ஊடக பிரபலங்களாக அந்த பிரிட்டிஷ் தம்பதியும், போலீஸ் தொடர்புக் கொண்ட போது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக, பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
அந்த விசாரணை தொடர்பான முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படுமெனவும் யுஸ்ரி சொன்னார்.
இவ்வேளையில், போலீஸ் தங்களை தொடர்புக் கொண்டதையும், விசாரணைக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதையும், சம்பந்தப்பட்ட தம்பதி X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, பேராக், ஈப்போவில், வேக வரம்பை மீறி பயணித்த சம்பந்தப்பட்ட தம்பதியிடம், போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், நூறு ரிங்கிட்டை கையூட்டாக கேட்டு பெறும் காணொளி ஒன்று வைரலானது.
‘TREAD the Globe’ எனும் யூடியூப் ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த காணொளியை கிட்டதட்ட இரண்டு லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.