Latestஉலகம்

பிலிப்பைன்ஸின் கன்லான் எரிமலை வெடித்து, வானில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பலைக் கக்கியது

மணிலா, மே 13 – மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு எரிமலை இன்று அதிகாலை வெடித்து, வானில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பெரிய சாம்பல் நிறப் புகையை கக்கியதோடு பாலிஸ்டிக் எறிபொருள்களையும் வெளிப்படுத்தியது.

அந்த தென்கிழக்காசிய நாட்டில் இன்னும் செயல்பட்டுவரும் 24 எரிமலைகளில் ஒன்றான கன்லான் ( Kanloan ) எரிமலை, கடந்த நூற்றாண்டில் பல வெடிப்புகளைச் சந்தித்ததோடு அவற்றில் அண்மையில் கடந்த மாதமும் இத்தகை வெடிப்பு ஏற்பட்டது.

டிசம்பரில் வெடிப்பின் போது வைக்கப்பட்ட ஐந்து அளவிலான எச்சரிக்கையில் – செவ்வாய்க்கிழமை மாறாமல் இருந்தது. இன்று அதிகாலை மணி 2.55க்கு கன்லான் எரிமலையின் உச்சிப் பள்ளத்தில் மிதமான வெடிப்பு ஏற்பட்டது என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது. ஐந்து நிமிடங்கள் வரை அந்த வெடிப்பு நீடித்தது.

வெடிப்பு ஒரு சாம்பல் நிற மிகப்பெரிய புகைமூட்டத்தை உருவாக்கியதோடு , அது காற்றோட்டத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் மேலே உயர்ந்து, பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்தது. பெரிய பாலிஸ்டிக் துண்டுகள் சில நூறு மீட்டர்களுக்குள் பள்ளத்தைச் சுற்றி வீழுந்ததாகவும் , எரிமலை உச்சிக்கு அருகில் தாவரங்கள் எரிவதற்கு அவை வழிவகுத்ததன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!