Latestமலேசியா

ஜோகூரில் குடிநுழைவு குற்றங்களுக்காக 29 பேர் கைது

ஜோகூர் பாரு, மார்ச் 1 – ஜோகூரில் இரண்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் குடிநுழைவு விதிகளை மீறிய 29 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமையன்று ஸ்குடாய் டோல் சாவடியில் 14 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார். இதர 15பேர் கோத்தா திங்கி, பெங்கராங்கில் கைது செய்யப்பட்டனர். ஸ்குடாயில் சாலை போக்குவரத்துத்துறை , இஸ்கண்டார் புத்திரி மாநகர் மன்றம் , போலீஸ் மற்றும் பிளஸ் நிறுவனம் ஆகியவை கூட்டாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 73 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டனர்.

குடிநுழைவு விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 10 ஆண்கள் மற்றும் 4 பெண்களும் அடங்குவர். பெர்மிட் இன்றி வெளிநாட்டினர் வேலை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து 15 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பஹாருதீன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!