கோலாலம்பூர், பிப்ரவரி 19 – புகைப்பிடிக்க குறிப்பாக குறுகலான இட வசதியை கொண்ட உணவகங்களில், புகைக்க சிறப்பு பகுதியை ஏற்படுத்தி தரும் பரிந்துரை மீதான, பல்வேறு தரப்பினரின் கண்ணோட்டத்தை ஆராய சுகாதார அமைச்சு தயாராக உள்ளது.
அவ்விவகாரத்திற்கு முழுமையான, சிறந்ததொரு தீர்வு காணப்படுவது உறுதிச் செய்யப்படுமென சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
அனைத்து தரப்பினருக்கும் நியாயமான, ஏற்புடைய முடிவு எட்டப்படும்.
அதே சமயம், தற்சமயம் உணவகங்களில் புகைக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீட்டுக் கொள்ளும் முடிவு எடுக்கப்படாது எனவும் அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.