Latestமலேசியா

புக்கிட் புரோகா மலை உச்சியில் திடீர் தீ ; 2 ஏக்கர் காடு அழிந்தது

செமஞ்சே, மார்ச் 18 – உள்ளூர் மலையேறிகளின் விருப்ப இடங்களில் ஒன்றான செமஞ்சே, புக்கிட் புரோகா காட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தீயில் மலை உச்சியில் உள்ள 2 ஏக்கர் காட்டுப் பகுதி அழிந்ததாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 வாக்கில் தகவல் கிடைத்து, செமஞ்சே தீயணைப்பு மீட்புப் படையின் 6 உறுப்பினர்கள் ஒரு FRT வாகனத்துடன் சம்பவ இடம் விரைந்தனர்.

நள்ளிரவைக் கடந்தும் தீயை அணைக்க அவர்கள் போராடியதாகத் தெரிகிறது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.

புக்கிட் புரோகா தீ குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் முன்னதாக சமூக ஊடகங்களில் பரவின.

இது நெட்டிசன்கள், குறிப்பாக வாரக் கடைசி நாட்களில் அங்கு மலையேறும் நடவடிக்கையில் ஈடுபடுவோரின் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!