கோத்த பாரு, மார்ச் 11 – கிளந்தானில் குவா மூசாங்கில் புலி அச்சுறுத்தல்கள் குறித்த பயம் நிலவி வருகிறது.
இதுவே, ஒராங் அஸ்லி மாணவர்களிடையே கல்வியை பாதியிலியே கைவிடும் விகிதங்கள் அதிகரிக்க ஒரு காரணமாக அமைகிறது என கிளந்தான் மாநில கல்வி இயக்குனர் டத்தோ முகமட் Zamri தெரிவித்தார்.
இந்த காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலால் பல ஒராங் அஸ்லி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்துகிறார்கள் என்று ஜம்ரி அப்துல் அஜீஸ் சுட்டிகாட்டினார்.
இந்நிலையில், மாநில கல்வி இலாகா SK Bihaiயில் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம், 30 ஓராங் அஸ்லி மாணவர்களில் 17 பேர் பள்ளிக்குத் திரும்பச் சொன்றுள்ளனர்.
ஒராங் அஸ்லியின் தலைவருடனான கலந்துரையாடலை தொடர்ந்து, அவர்களின் முயற்சிகள் வெற்றியடைந்ததாக ஜம்ரி மேற்கோள் காட்டினார்.
இதற்கு, கிளந்தான் மாநில கல்வி இலாகா இந்த குழந்தைகளை பள்ளிக்கு திரும்புவதற்கு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் உதவியை நாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.