கோலாலம்பூர், நவ 24 – பெண் ஒருவருக்கு அரசு சார்பு நிறுவனம் ஒன்றின் தலைமை இயக்குனர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதோடு அவரது கை தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக புகார்தாரரான பெண் மற்றும் சம்பந்தப்பட்ட தலைமை இயக்குனரின் சிறப்பு உதயாளரிடமும் வாக்குமூலம் பதிவு செய்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ முஹம்மட் ஷுஹைலி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தலைமை இயக்குனரிடம் நேற்று பிற்பகல் மணி 2.30 முதல் மாலை 4 மணிவரை புத்ரா ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அதோடு புகார்தாரரும் அந்த தலமை இயக்குனரும் இதற்கு முன் சந்தித்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரது சிறப்பு அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இத்த விவகாரம் தொடர்பில் மேலும் சில நபர்களும் விசாரிக்கப்படுவர் என முஹம்மட் ஷுஹைலி தெரிவித்தார்.