Latestமலேசியா

பெரும்பான்மை மலாய்க்காரர்கள் ஏற்கும்போது மலாய்க்காரர்கள் அல்லாதார் பிரதமராக வர முடியும்; டாக்டர் மகாதீர் கூறுகிறார்

கோலாலம்பூர், டிச 18 –  பெரும்பான்மை  மலாய்க்காரர்கள்  ஏற்றுக்கொள்ளும்போது மலாய்க்காரர் அல்லாதார்  பிரதமராக வர முடியும் என  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் தெரிவித்தார். நாட்டின் உயர் பதவிக்கு ஒருவர் தேவை என்பதை  அரசியலமைப்பு சட்டம்  தெளிவாக தெரிவித்தாலும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் ஒருவர்தான் பிரதமராக வரவேண்டும் என்பதை இன ரீதியிலான அம்சங்கள் வலியுறுத்துவதை  மகாதீர் சுட்டிக்காட்டினார்.  பிரதமர் பதவிக்கான வேட்பாளர்  நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதோடு, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும், பேரரசரால் ஏற்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் மகாதீர் சுட்டிக்காட்டினார். 

சிங்கப்பூரில் கூட சுதந்திரம் பெற்றது முதல்  பெரும்பான்மை  சீன சமுகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக இருந்து வருகின்றனர்.  பினாங்கில் சீனர் அல்லாத ஒருவர்  முதலமைச்சர் பதவியை வகித்தது கிடையாது.  எனினும் மலாய்காரர் அல்லாதாருக்கும்  சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக  தேசிய  முன்னணியின் கீழ்  அம்னோ அதிகமான இடத்தை கொண்டிருந்தாலும் பினாங்கு முதலமைச்சர் பதவியை கெரக்கான் (Gerakan)  கட்சிக்காக  விட்டுக்கொடுத்தது. அதே அடிப்படையில்தான்  அரசியல் ரீதியில் மலாய்க்காரர்கள் பிரிந்திருந்தாலும்  அவர்கள்தான் இன்னமும் பெரும்பான்மையினராக  இருக்கின்றனர். மலாய்க்காரர் அல்லாதாரை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியும் என  மலாய்க்காரர்கள்  உணரும்போது  மலாய்க்காரர் அல்லாதர்  பிரதமராக வரமுடியும் என டாக்டர் மகாதீர்  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!