Latestமலேசியா

பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக அருள் ராஜூ நியமனம்

கோலாலம்பூர். பிப் 27 – பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக அருள் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளதோடு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நூருல் அஃபிதா கமாலுடின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களின் இந்த நியமனம் இன்று முதல் அமலுக்கு வருவதாக பெர்னாமா தலைவர் டத்தோஸ்ரீ வாங் சுன் வாய் தெரிவித்தார். இன்று விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற பெர்னாமா வாரியக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். 55 வயதுடைய அருள் ராஜூ 1991ஆம் ஆண்டு பெர்னாமாவில் பயிற்சி நிருபராக இணைந்தார். மலாயா பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டதாரியான அவர் இதற்கு முன் பெர்னாமா செய்திப் பிரிவின் ஆசிரியர் குழுவின் உதவி ஆசியரியராகவும் இருந்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!