ஒடிசா, டிச 26 – ஈவு இரக்கமற்ற மகன் ஒருவர், தன் 70 வயது தாய்க்குக் கொடுத்த தண்டனை காண்போரை நடுங்க வைத்துள்ளது. அதுவும் எதற்கு தெரியுமா? தனது தோட்டத்தில் இருந்து காலிபிளவரை பறித்ததற்காக இப்படி ஒரு கொடுமையான தண்டனை கொடுத்துள்ளார் அந்த மகன்.
70 வயது தாய் ஒருவர் தன் இளைய மகனின் விளைநிலத்திலிருந்து காலிபிளவரைப் பறித்ததுதான் விளைவாக முதலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவ்வாக்குவாதம் முற்றவே, அந்த ஆடவர் ஆத்திரமடைந்து தன் தாயை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு, அடி விளாசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, விலக்கிவிடச் சென்ற ஊர்க்காரர்களையும் அந்த ஆடவர் மிரட்டியுள்ளர். பின்னர், அப்பெண்ணை மீட்ட ஊர்க்காரர்கள், அவரை அருகிலிருந்த சமூக சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். படுகாயமடைந்த அந்த தாய் அருகில் உள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட தாயிடம் விவரம் கேட்டறிந்த காவல்துறை, அவருடைய இளைய மகன்மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
ஈன்ற தாயை மகனே மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.