பத்து பஹாட், பிப்ரவரி 19 – பெல்லா கொலை வழக்கில் தடயவியல் அறிக்கையைச் சமர்ப்பிக்க மார்ச் 11-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
பெல்லாவின் காதலன் மீதான அந்த கொலை வழக்கு அன்றைய தேதியில் மறுசெவிமெடுப்புக்கு வரும் என பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
தங்களுக்கு இன்னமும் தடயவியல் அறிக்கைக் கிடைக்கவில்லை என அரசு தரப்புக் கூறியதை பரிசீலித்து நீதிபதி அத்தேதியை நிர்ணயித்தார்.
அவ்வழக்கை மூவார் உயர் நீதிமன்றத்திக்கு மாற்றக் கோரும் தங்கள் முயற்சிக்கு, தடயவியல் அறிக்கை மட்டுமே இன்னமும் கிடைக்கவில்லை என அரசு தரப்பு கூறியது.
அப்புதியத் தேதிக்கு, எந்தவொரு தரப்பும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
மீலா ஷார்மிளா சம்சூசா என்ற இயற்பெயரைக் கொண்ட பெல்லாவை கடந்தாண்டு டிசம்பரில் கொலைச் செய்ததாக
முன்னாள் தபால்காராரான 32 வயது முஹமட் ஹைக்கால் மாஹ்வுஸ் மீது ஜனவரி 24-ங்காம் தேதி அதே பத்து பஹாட் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முதன் முறையாக குற்றம் சாட்டப்பட்டது.