கோலாலம்பூர், ஜன 4 – பேங்க் ராக்யாட் இதுவரை 1.14 பில்லியன் ரிங்கிட் கடன் உதவிகளை இந்திய சமூகத்திற்கு வழங்கியது. 46,133 இந்தியர்கள் இந்த கடன் உதவியில் பயன் அடைந்தாக தொழில்முனைவர் மேம்பாடு , கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று பேங்க் ராக்யாட்டின் இடைக்கால தலைவர் டத்தோ முகமட் இர்வான் முகமட் முபாரக் மற்றும் பேங்க் ராக்யாட்டின் தலைமை செயல் அதிகாரி டத்தோ டாக்டர் முகமட் ஹனிஸ் ஒஸ்மான் ஆகியோரிடம் விளக்கம் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ரமணன் இதனை தெரிவித்தார்.
இந்த ஆண்டிலும் மற்ற சமுகங்களோடு இந்திய சமுகத்திற்கும் தொடர்ந்து பேங்க் ராக்யாட் உதவி வழங்கும் என்பதோடு அந்த பொருளகமும் சிறந்த அடைவு நிலையை பெறும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறினார் இந்த பொருளகத்தின் தலைவர் டத்தோ முகமட் இர்வான் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கமட் ஹனிஸ் ஒஸ்மான் ஆகியோர் வர்த்தக துறையில் முன்னேற்றும் காண்பதற்கு முயற்சியை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்வார்கள் என்றும் ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.