கோலாலம்பூர், நவம்பர் 27 – தமது 11 வயது மாணவர் ஒருவர் அசல் பேனா வடிவில் உள்ள கத்தியை பள்ளிக்கு கொண்டு வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் ஆசிரியர் ஒருவர்.
இதை வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என கேட்டதற்கு, அதற்கு கையை வெட்ட என அம்மாணவர் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
சமூக அக்கறையோடும் பெற்றோர்கள் மத்தியில் எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இது குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த ஆசிரியர்.
பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, அவர்களின் புத்தகப் பையை பெற்றோர்கள் அவ்வப்போது சோதனையிடுமாறும் அவர் தனது பதிவில் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த காணொளி வைரலாகி பல பெற்றோர்களும் தங்களின் கவலையை பகிர்ந்து வருகின்றனர்.