ஈப்போ, ஜன 4 – பேரா மாநில சொக்சோ இயக்குனராக மோகனதாஸ் வீரையா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் மலாக்கா, சிலாங்கூர், புத்ராஜெயா, சபா ஆகிய இடங்களில் சொக்சோ சமூக பாதுகாகாப்பு நிறுவனத்தில் 57 வயதான மோகனதாஸ் சேவையாற்றியுள்ளார். இன்று ஈப்போ இந்திரா முலியா அரங்கில் மந்திரி பெசார்சாரணி முகமட் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் மோகனதாஸ் நியமனம் குறித்து பேரா மாநில மனிதவளம், சுகாதார பிரிவுக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.