![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-24-Nov-2023-01-35-PM-9099.jpg)
புத்ரா ஜெயா, நவ 24 -பொருளாதார விவகாரங்களிலும் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதிலும் ஒற்றுமை அரசாங்கம் கவனம் செலுத்தும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இன்று தொடங்கும் தமது இரண்டாவது ஆண்டு ஆட்சியில் அந்த இரு விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்கும் என தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் பாமி பாட்சில் தெரிவித்தார். மடானி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புத்ரா ஜெயாவில் நேற்றிரவு நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் சடங்கில் கலந்துகொண்டபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். குறைந்த வருமானம் பெறும் தரப்பினர், கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைநிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என பாமி பாட்சில் கூறினார். அடுத்த ஆண்டு அதிகமான வேலை வாய்ப்புகளும் ஆக்கப்பூர்வமான பொருளாதார நன்மைகளும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.