ஜெர்த்தே, ஏப் 23 – வாடிக்கையாளர்களுக்கு பொரு விநியோகிக்கும் சேவை நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சென்ற மோட்டார் சைக்கிள் சைக்கிள் கவிழ்ந்ததைத் தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த கால்வாயில் விழுந்ததால் இறந்தார். இந்த துயரச் சம்பவம் ஜெர்த்தே Kampung Gerai யில் நேற்றிரவு 8 மணியளவில் நிகழ்ந்தாக Besut மாவட்டத்தின் போலீஸ் தலைவர் சூப்பிரடண்ட் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
Wan Muhamad என்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவர் Kampung Layout Gerai யிலிருந்து Kampung Gerai Tua விலுள்ள தமது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையோரத்தில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அவர் கால்வாயில் விழுந்தார். அந்த கால்வாயின் வேகமான நீரோட்டத்தினால் விழுந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டதால் அவர் மூழ்கி மாண்டார்.