Latestமலேசியா

சிலாங்கூர் பூச்சோங் பிரிமாவில் துப்பாக்கி ஏந்திய ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்

கோலாலம்பூர், ஜன 15 – சிலாங்கூர் தாமான் பூச்சோங் பிரிமாவில்  சாலையோரத்தில் காருக்குள் இருந்த  ஆடவன்  ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். நேற்று மதியம்  நடைபெற்ற அந்த சம்பவத்தை சிலாங்கூர் போலீஸ் தலைவர்  டத்தோ  ஹுசைன் ஒமர் கான் உறுதிப்படுத்தினார்.  இந்த விவகாரம் தொர்பாக விரைவில் ஊடகங்களுக்கு மேல் விவரங்களை தெரிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்று மலை 5.30 மணி வரை சம்பவம் நிகழ்ந்த பகுதியில் போலீஸ் தடயயியல் அதிகாரிகள் அந்த காருக்குள்  சாட்சியங்களை தேடிக்கொண்டிருந்ததை காணமுடிந்ததாக பெர்னாமா தெரிவித்தது. அதோடு அங்கு வந்த போலீஸ் வாகனம் ஒன்று   மாலை மணி 6.15 அளவில் காரிலிருந்தவரின்  உடலை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றது. 

இதற்கு முன்னதாக நேற்று மாலை மணி  3.49அளவில் தாமான் பூச்சோங் பிரிமா ஸ்ரீ அகாசியா அடுக்ககத்தில் சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும்  உள்நாட்டை சேர்ந்த அந்த சந்தேகப் பேர்வழிக்குமிடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதாக கூறப்பட்டது.  பல்வேறு குற்றச் செயல்கள் பின்னணியைக் கொண்ட அந்த சந்தேகப் பேர்வழி போதைப் பொருள் குற்றங்களிலும் சம்பந்தப்பட்டதோடு போலீசாரின் தேடும் பட்டியலில் இருந்தவர் என நேற்றிரவு போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.   இச்சம்பவம் தொடர்பில் சுபாங் ஜெயா போலீஸ்  தலைமையகத்தை  சேர்ந்த  குற்றவியல்துறை  விசாரணை மேற்கொண்டு வருவதாக  ஹுசைன் கூறினார்.  அச்சம்பவம் குறித்த காணொளி  சமூக  வலைத்தளத்தில்   வைரலாகியிருப்பதாகவும் அந்த காணொளியை பகிர வேண்டாமென போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!