Latestமலேசியா

போலிஸ் காருக்கு ‘பெருமையுடன்’ தீ வைத்த இளைஞன் சிக்கினான்!

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 15 – முத்தியாரா டாமான்சாரா MRT ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை உதவி போலிசாரின் காருக்குத் தீ வைத்த ஆடவன் கைதாகியுள்ளான். P-hailing ஓட்டுநரான 26 வயது அவ்விளைஞன், ஃப்ளோரா டமன்சாராவில் இன்று நண்பகல் 12 மணியளவில் கைதுச் செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் சொன்னார். அவ்வாடவன் பெட்ரோல் குண்டை வீசி போலிஸ் காருக்கு தீ வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது அவன் பயன்படுத்திய மற்ற சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சதிநாச வேலையாக வகைப்படுத்தப்பட்டு, அச்சம்பவம் குற்றவியல் சட்டம் 435-ஆவது பிரிவில் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவன், ஏற்கனவே பேருந்து நிறுத்துமிட சுவரைச் சேதப்படுத்தியிருப்பதும் போலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. போலிஸ் காருக்கு தீ வைத்து விட்டு, அதன் அருகில் தாம் நிற்கும் வீடியோ ஒன்றை அவ்வாடவன் முன்னதாக டிக் டோக்கில் பதிவேற்ற, அது வைரல் ஆனது. போலிஸ் காருக்குத் தீ வைத்ததைப் பெருமைப் பீற்றிக் கொண்டு #polistakdekeje என்ற ஹேஷ்டேக்கை அவன் பயன்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!