ஈப்போ, டிச 8 – பேரா மாநில போலீஸ் இலாகா ஏற்பாட்டில் தீபத் திருநாள் கொண்டாட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்த மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யூஸ்ரி ஹாசான் பஸ்ரி குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்து உரையாற்றியபோது போலீஸ் துறையில் சேவையாற்றிவரும் அனைத்து இன பணியாளர்களின் நலன்கள் காக்கப்படும் என்றார். அதோடு இந்த தீபத் திருநாள் நிகழ்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து சேவையாற்றுவதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருப்பதோடு இந்த ஒற்றுமை போலீஸ் துறையில் தொடரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் ஒற்றுமை மிக அவசியம். அந்த ஒற்றுமையை நிலை நாட்ட அரசாங்கமும் தொடர்ந்து பாடுபட்டு வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று புகழராம் சூட்டினார். மாநில போலீஸ் இலாகாவில் உயர் நிலை போலீஸ் அதிகாரியாக பணியாற்றிவரும் சூப்ரிடெண்ட் ரவி முனுசாமி முன்னின்று இந்த நிகழ்வை வழி நடத்தினார். ஈப்போ டைகர் லேன் சாலையில் உள்ள போலீஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்த தீபத் திருநாள் நிகழ்வில் 400க்கும் மேற்பட்டோர் கலத்துக்கொண்டனர், இந்த நிகழ்வில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. நிகழ்வில் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டது.