கோலாலம்பூர், ஜன 13- போலீஸ் படையில் சிறு அளவிலான அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் மட்டுமே பிரச்சனைக்குள்ளாகி குற்றச் செயலில் ஈடுபட்டதாக போலீஸ் படை தலைவர் ரஸாருதீன் உசேன் தெரிவித்தார். எனவே இது குறித்து மக்கள் கவலை அடைய வேண்டியதில்லை. போலீஸ் படை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன. எனவே நமது பாதுகாப்பு படை உறுப்பினர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பிரச்சனைக்குரிய மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எப்போதும் கண்காணிக்கப்படுகின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ரஸாருதீன் தெரிவித்தார். போலீஸ் படையைச் சேர்ந்த 137,000 உறுப்பினர்கள் 2 விழுக்காட்டினர்கூட குற்றச்செயல்களில் ஈடுபடுவதில்லையென அவர் கூறினார்.